வெப்பத்தை விரட்டிய மழை.. குளிர்ந்தது நிலம்.. மகிழ்ச்சியில் மக்கள்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான் சூழல் நிலவியது...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையில் பெண்கள், சிறுவர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தங்கல், பாறைப்பட்டி, சித்துராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது....


Next Story

மேலும் செய்திகள்