குடும்பத்தகராறில் தற்கொலை செய்வதுபோல் வீடியோ பதிவு

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, விஷம் அருந்துவதுபோல் போலியாக வீடியோ பதிவிட்ட தம்பதியரை போலீசார் மீட்டனர். டெம்போ ஓட்டுநர் மணி, தனது மனைவி சந்தியா மற்றும் 6 மாத பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுப்பதுபோல் வீடியோ பதிவு செய்து, அதனை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உறவினர்களை பயமுறுத்த திட்டமிட்டு, போலியாக விஷம் அருந்துவது போல் வீடியோ எடுத்தது அம்பலமாகியுள்ளது. இருவரையும் பழையூர் சோதனைச் சாவடியில் போலீசார் மீட்டு, உறவினர்கள் முன்னிலையில் எழுதி வாங்கிக்கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்