சொந்தப் பணத்தை கொடுத்து.. தாசில்தார் செய்த நெகிழ்ச்சி செயல்

x

சொந்தப் பணத்தை கொடுத்து.. தாசில்தார் செய்த நெகிழ்ச்சி செயல்

மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது... இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய் துறையினர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்... அப்போது தலைமுடியை சரியாக வெட்டாத மாணவர்களை பெற்றோர்களை வரவழைத்து அறிவுறுத்தியும், சில மாணவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமார் சொந்த பணத்தை தந்து தலைமுடியை வெட்டி அனுப்புமாறும் அனுப்பி வைத்தார்... கையில் பல நிறங்களில் மாணவர்கள் கயிறு கட்டி இருந்தால் கயிறுகள் அங்கேயே வெட்டப்படுகின்றன... தொடர்ந்து 3வது நாளாக வருவாய்த் துறையினர் பள்ளியின் வெளியே நின்று மாணவர்களை கண்காணித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்