புத்தக பையில் கத்தியா.? - "எங்க மேல தப்பே இல்லை"..கைதான மாணவர்கள் பகீர் வாக்குமூலம் -அதிர்ந்த நெல்லை

x

புத்தக பையில் கத்தியா.? - "எங்க மேல தப்பே இல்லை".. கைதான மாணவர்கள் பகீர் வாக்குமூலம் - அதிர்ந்த நெல்லை

புத்தகைப்பையில் ஆயுதங்கள் இருந்ததாக நெல்லையில் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களை பொய் புகாரில் போலீசார் கைது செய்திருப்பதாக கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியரை தாக்க, மாணவர்கள் கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியது. தொடர்ந்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மூவரும் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். பள்ளியின் வரலாற்று பிரிவு ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையேயான பிரச்சனையை எங்கள் மீது திணித்து பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர். யார் எந்த தவறு செய்தாலும் வரலாற்று பிரிவு மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் எங்கள் புத்தகப்பையில் ஆயுதங்கள் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்