ரவுடி ஜான் கொலை வழக்கு - மேலும் ஒருவர் சரண்
சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கடந்த 19ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தாமாக வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய துரைசாமி என்பவர் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
Next Story