வாலண்டியராக வந்த மழை.. ஆனந்தமாக கொட்டிய நீர்வீழ்ச்சி.. சுற்றுலா பயணிகள் "ஹாப்பி அண்ணாச்சி"

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் காட்டேரி அணை நிரம்பி வழிகிறது. கோத்தகிரி, அருவங்காடு, சேலாஸ், காட்டேரி, எடப்பள்ளி, கேத்தி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் காட்டேரி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கனமழையால் காட்டேரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்