திருமணமான பத்தே நாட்களில்... சடலமாக கிடந்த இளம்பெண் - பெற்றோர் தலையில் விழுந்த பேரிடி..

x

மேலூர் அடுத்துள்ள தும்பைப்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சினேகா. 19 வயதேயான இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த மகேஷ் என்பவருக்குமிடையே கடந்த 20 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. கோவில்பட்டியில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்த சினேகா, திடீரென வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமான 10 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்