அரிவாள் மனையால் காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்

x

அரிவாள் மனையால் காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர்தான் இந்த ஆகாஷ்...

இவர், தன் மாமா மகளான மோனிஷாவை, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது..

இதில், திடீரென இருவருக்குமிடையே கருத்து வேறுபாடால் விரிசல் ஏற்பட்டதில், ஆகாஷுடான காதலை மோனிஷா கைவிட்டதாகவும் சொல்லப்படுகிறது..

கருத்து வேறுபாடால் பிரிந்த காதலி - இளைஞர் வெறிச்செயல்

இந்நிலையில், கோவையில் பணிபுரிந்து வந்த ஆகாஷ், செல்போனில் மோனிஷாவை அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதில், இருவருக்குமிடையே தகராறு முற்றி இருக்கிறது..

இதில், ஆத்திரத்தில் இருந்த ஆகாஷ்.. அன்றிரவே கோவையில் இருந்து கிளம்பி மதகுபட்டி வந்து அரங்கேற்றிய கொடூரத்தின் விளைவு தான் இந்த குருதி தடயங்கள்..

"மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறோம்"

"ஊரே பதறிப்போயுள்ளது"

"பீர் பாட்டிலை கொண்டு இளைஞர் வெறிச்செயல்"

மதகுபட்டி வந்த ஆகாஷ், நேராக மோனிஷாவின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தையிடம் தங்களை திருமணம் செய்து வைக்குமாறு சொல்லி தகராறு செய்திருக்கிறார்..

இதற்கு துளியும் மோனிஷாவின் தந்தை சம்மதிக்காத நிலையில் நிலைமை மோசமாகி தகராறு முற்றியிருக்கிறது..

இதில், மோனிஷாவை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஆகாஷ், தன் கழுத்திலும் பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு தற்கொலை செய்தது பேரதிச்சியை ஏற்படுத்தியது..

மோனிஷாவின் தாய்

"நடவுக்கு போயிருந்தேன்"

"உறவினர் மகன்தான்"

"தாயில்லா பிள்ளை என இரக்கப்பட்டு, சோறு போட்டேன்"

ஆகாஷின் தாய் சில மாதங்கள் முன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது...

தாயின் மறைவுக்கு பிறகு தந்தையுடன் தொடர்பில்லாமல் இருந்த ஆகாஷூக்கு இதை காரணம் காட்டியும் மோனிஷாவின் தாய் மகளை கட்டிக் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது..

இந்நிலையில், மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருவதையும் காரணம் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததில் இந்த கோரம் அரங்கேறி இருக்கிறது...

மோனிஷாவின் தாய்

"மகள் படிக்க வேண்டும் எனக்கூறி பெண் கொடுக்கவில்லை"

"காலையில் பிள்ளைகளுக்கு டியூசன் நடத்தி கொண்டிருந்தாள் என் மகள்"

காலையில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்துக் கொண்டிருந்த மகளை ... மாலையில் சடலமாக பார்த்ததாக கூறி கதறி அழுத இந்த தாயின் வேதனை பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்டதும், பின் விரக்தியில் அவரும் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் மனதை ரணமாக்கி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்