குமரியில் அதிர்ச்சி சம்பவம் - கோழி பண்ணை ஓனரை வீடு புகுந்து வெட்டிய ரவுடி

x

சாலையில் வாகனத்திற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் கோழிப்பண்ணை உரிமையாளரை வீடு புகுந்து வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜேஷூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி வினித் என்பருக்கும் சாலையில் வாகனத்திற்கு வழி விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு ராஜேஷை வீடு புகுந்து வெட்டி இருக்கிறார் வினித். மேலும் இதனை தடுக்க வந்த ராஜேஷின் டிரைவர் ஷைஜூவும் படுகாயம் அடைந்து இருக்கிறார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த வினித் உட்பட இருவரை கைது செய்தனர். இதில் வினித் போலீசிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ரவுடி வினித் ராஜேஷை மிரட்டும் ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்