குடும்பத்தோடு வந்து காவல்துறைக்கு நன்றி தெரிவித்த கோவை தொழிலதிபர்
கோவையில் கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுக் கொடுத்த காவல் துறைக்கு தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்து நன்றி தெரிவித்தார். துடியலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் சூர்யகுமாரின் 11 வயது மகனை கார் ஓட்டுநர் நவீன், கடந்த 15-ஆம் தேதி கடத்திச் சென்றார். 12 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய அவரை, தனிப்படை போலீசார் பவானி அருகே கைது செய்து, தொழிலதிபரின் மகனை பத்திரமாக மீட்டனர். பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவனை நவீன் கடத்திச் சென்றதாக கூறப்படும் நிலையில், 10 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்தார் என்று ஸ்ரீதர் சூர்யகுமார் கூறியுள்ளார்.
Next Story