கொடைக்கானலில் கோடை விழா..அனைவரையும் கவர்ந்த ஜல்லிக்கட்டுக் காளை - கண்ணை கவரும் காட்சிகள்

x

கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய நிகழ்வான‌ நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி உற்சாகமாக நடத்தப்பட்டது... இதில் தமிழக அரசின் திட்டங்கள், ஜல்லிக்கட்டு காளை, பொங்கல், வாத்து, மீன்கள், பசுமை போர்த்திய மலை, அருவி உள்ளிட்ட உருவங்கள் படகுகளில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தப் படகு அலங்காரப் போட்டியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் சிறிது நேர‌ம் வ‌ல‌ம் வ‌ந்தன... முதல் பரிசை ஊரக வளர்ச்சித் துறையும், 2வது பரிசை மீன்வளத்துறையும், 3வது பரிசை சுற்றுலாத்துறையும் தட்டிச் சென்றன...


Next Story

மேலும் செய்திகள்