அப்பாவி ஜீவன் உயிரை பறித்த பரோட்டா.. ஊரையே நடுங்க விட்ட உண்மை சம்பவம்

x

அப்பாவி ஜீவன் உயிரை பறித்த பரோட்டா.. ஊரையே நடுங்க விட்ட உண்மை சம்பவம்

கேரளாவில் பரோட்டாக்களை தின்ற மாடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கொல்லத்தை அடுத்த வெளிநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஹஸ்புல்லா. இவர் மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வரும் நிலையில், பரோட்டா கடையில் மீதமாகும் பரோட்டக்களை மாடுகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், பரோட்டாவை உட்கொண்ட 5 மாடுகள் உயிரிழந்தன. மேலும் 9 மாடுகளுக்கு கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரோட்டா செரிமானம் ஆகாமல் போனதே, மாடுகளின் உயிரிழப்பிற்கு காரணம, உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்