கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி.. விடிய விடிய ரெய்டு.. அதிரடி காட்டும் SP

x

கள்ளச்சாராய நடமாட்டத்தை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, அரூர் தாலுகாவில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டத்தை இணைக்கும் மாவட்ட எல்லையான கல்வராயன்மலை பகுதியில், இன்று அதிகாலையில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் 35 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அடர்த்தியான வனங்களை கொண்ட மலைப்பகுதியில் நான்கு கிலாமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் மலை உச்சியில் சென்று மாவட்ட எல்லை பகுதி வரை சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்