60 உயிர் போயும் அடங்காத வெறி.. குளியலறையில் சாராய படையல்.. சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூரை அருகே திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

மானத்தாள் கிராமம் நாடார் காலனியில் சாராயம் காய்ச்சுவதாக தொளசம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னத்தம்பி வீட்டின் குளியல் அறையில் 50 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. விசாரணையில் குலதெய்வ திருவிழாவுக்கு வரும் உறவினர்களுக்கு சாராயத்துடன் விருந்து வைப்பதற்காக சாராயம் காய்ச்சியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாமிக்கு படைப்பதற்காக ஏற்கனவே 2 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துஅழித்த காவல் துறையினர், சின்னதம்பியை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்