மனைவியை எரித்து கிணற்றுக்குள் வீசிய கொடூர கணவன்.! கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கர சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அடுத்த க. மாமனந்தல் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். லாரி ஓட்டுநரான இவருக்கு, சுதா என்பவருடன் திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அருகில் உள்ள விவசாய கிணற்றில், கார்த்திக்கின் மனைவி சுதா, தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும், இதில் மனைவியை தீ வைத்து கொன்று கணவர் கிணற்றில் வீசி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்