"கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்..." -"கூடவே இருந்து நான் பார்த்துக்கொள்வேன்"..நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஜோடி- "மனைவியாய் கிடைத்ததற்கு சந்தோஷப்படுகிறேன்"

x

வேலூரில் திருமண பந்தத்தில் இணைந்த மாற்றுத் திறனாளி இணையை ஊர்மக்கள் மனமாற வாழ்த்தினர்... வேலூர் குடியாத்தம் கல்லூர் சீனிவாசா நகரைச் சேர்ந்த சரவணனுக்கு போலியோவால் இரு கால்களும் செயலிழந்த நிலையில், 12ம் வகுப்பு வரை படித்து சித்தூர் கேட் பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார்... பிச்சனூர் பேட்டையைச் சேர்ந்த உயரம் குறைவான மாற்றுத் திறனாளி கீர்த்தனா பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் இருவருக்கும் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று இனிதே நடைபெற்றது. செல்வபெருமாள் கோவிலில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டு மனமாற வாழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்