நண்பனுக்கு பாலில் போதை பொருள் கலந்து கொடுத்த சிறுவன்? - துடித்து நின்ற உயிர்

x

ஈரோடு அருகே போதை பொருட்களை உட்கொண்டதால் சிறுவன் உயிரிழந்தாகவும், இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பவானி அடுத்த ஒரிச்சேரி புதூர் காந்தி நகரை சேர்ந்த கவுதம் என்ற 10-ம் வகுப்பு மாணவன் நண்பருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். தாய் அவரிடம் கேட்டதற்கு நண்பர் பாலில் போதை பொருளை கலந்து கொடுத்ததாக கூறி உள்ளார். உடனே சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவுதம் சிகிச்சை பலனின்றி பலியானார். மாணவனின் இறப்புக்கு காரணமாக மற்றொரு சிறுவன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பெண்கள் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்