மின்சாரம் பாய்ச்சி சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை

x

தேனி மாவட்டத்தை சேர்ந்த 50 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் கார்த்திகேயன், பல்லாவரத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 6 மாத காலமாக மன அழுத்தத்தில் இருந்தவர் மனநல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவியும், 2 குழந்தைகளும் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்ட கார்த்திகேயன் மின்கம்பியை உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்துள்ளார். ஊரில் இருந்து திரும்பிய மனைவி, வீடு உள்பக்கமாக அடைத்திருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய தாழம்பூர் போலீசார், கார்த்திகேயன் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில், தனக்கு பலர் செய்வினை செய்துள்ளார்கள், அதிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருக்கிறார். சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் போலீசார், பணிச்சுமையால் அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்