இரவில் பஸ்ஸை மறித்து போராட்டம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து சிறுகுடிக்கு இரவு 8.30 மணிக்கு செல்ல வேண்டிய அரசு பேருந்து இயக்கப்படாததால் சிறுகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பயணிகள் ஆத்திரமடைந்து பேருந்து நிலையத்தில் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பயணிகள் மறியலை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்