பேருந்தில் வெடித்த சர்சை...- "பாதியில் இறக்கி விட்ட சோகம்" - இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கட்டம்மன் கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், நாட்டுப்புறக் கலைஞர் ஆவார். இவர் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தில் கட்டைக்கால் ஆட்டம் கலை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, தனது சொந்த ஊருக்கு திரும்பிய போது, மதுரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளார். ஆனால், கட்டைக்கால் ஆடும் மரப்பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதியில்லை எனக்கூறி தன்னை ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறக்கி விட்டதாக, தெரிவித்துள்ள ஆகாஷ், இதுகுறித்து கேள்வி கேட்ட போது, தன்னை ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நாட்டுப்புற கலைப் பொருள்களுடன் கலைஞர்களை பேருந்தில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்