பள்ளி குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

x

பாலக்கோடு அருகே அரசுப் பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெருங்காடு மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறையில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பணிகளை, 5ம் வகுப்பு பயிலும் 3 மாணவிகள் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக தந்தி டிவியிலும் செய்தி வெளியான நிலையில், தலைமை ஆசிரியை கலைவாணியை, பணியிடை நீக்கம் செய்து தருமபுரி கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்