இளைஞரை பதறவிட்ட ஒற்றை போன் கால்...தனி அறைக்கு அழைத்து வீடியோ கால் - உங்களுக்கும் நடக்கலாம் உஷார்

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

இளைஞரை பதறவிட்ட ஒற்றை போன் கால்

தனி அறைக்கு அழைத்து வீடியோ கால்

வீடியோவை பார்த்து நூலிழையில் தப்பிய சம்பவம்

உங்களுக்கும் நடக்கலாம் உஷார்

சைபர் கிரைம் மோசடி கும்பல் விரித்த வலையில் இருந்து நூலிழையில் தப்பிய இளைஞர், போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு, சைபர் க்ரைம் மோசடி கும்பல் நூதன முறையில் வலை விரித்திருக்கிறது...

டெலிபோன் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் தொடர்பு கொண்ட இருவர், இளைஞரின் ஆதார் கார்டு மூலம் மும்பை தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் பணமோசடி செய்யப்பட்டிருப்பதாக சொல்லி மிரட்டி இருக்கின்றனர்...

தொடந்து, மும்பை போலீஸ் கைது செய்ய வந்து கொண்டிருப்பதாக கூறி இளைஞரை பதற்றமடைய செய்த அவர்கள், இளைஞரை ஆள் இல்லாத தனி அறைக்குள் வந்து தங்களுடன் வீடியோ காலில் பேசுமாறு காய்நகர்த்தி இருக்கின்றனர்..

வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம்

அலெர்ட்டான இளைஞர், அழைப்பை துண்டித்து போலீசில் புகார்

மும்பை போலீஸ் எனக்கூறி மோசடி கும்பல் விரித்த வலையில் இருந்து நூலிழையில் தப்பிய இளைஞர், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்