மாணவிகளிடம் அத்துமீறிய 4 பேராசிரியர்கள்..கோவையில் பேரதிர்ச்சி

x

கோவை மாவட்டம் வால்பாறையில், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த நான்கு உதவி பேராசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கல்லூரியில் தற்காலிக உதவி பேராசிரியர்களாக பணிபுரியும் 4 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் கல்லூரியின் உதவி பேராசிரியர்களான சதீஷ் குமார், அன்பரசன், முரளி ராஜ் மற்றும் ராஜபாண்டி ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்