"பட வாய்ப்பு தருவதாக வீட்டிற்கு அழைத்து.." - திரையுலகில் தலைதூக்கும் பாலியல் கொடுமைகள்..

x

"பட வாய்ப்பு தருவதாக வீட்டிற்கு அழைத்து.." - திரையுலகில் தலைதூக்கும் பாலியல் கொடுமைகள்.. இளம் நடிகை பரபரப்பு புகார்

பட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி, நடிகர் பாபுராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை இளம் நடிகை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2019ஆம் ஆண்டு பட வாய்ப்பு தருவதாக‌ கூறி நடிகர் பாபு ராஜ் தன்னை எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்த‌தாக கூறியுள்ளார். அங்கு, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த‌தாக குற்றம் சாட்டிய இளம் நடிகை, இதுகுறித்து ரகசிய வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, தற்போது கொச்சி மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும் மலப்புறம் மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சசீதரனிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் சசிகுமார் மேனனும் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய கொச்சி காவல் துணை ஆணையர் சசீதரன், எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு கூறியதால், பின்னர் புகார் அளிப்பதாக கூறி இளம் நடிகை சென்றதாகவும், ஆனால் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றம் சாட்டியுள்ள இளம் நடிகை தன்னுடைய சொகுசு விடுதியில் பணிபுரிந்தவர் என்றும், அவருக்கு பின்னால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும், சதியை அம்பலப்படுத்துவேன் என்றும் நடிகர் பாபுராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்