"நா நிறைய பேர் கூட போயிருக்கேன்".. வைரலாகும் ஆடியோ.. கதறி அழும் காதலி

x

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்கிற நபர், இன்ஸ்டா கிராம் மூலம் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து நட்பாக பேசிப்பழகி வந்த அவர், இளம்பெண்ணை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி செலவிற்கு அடிக்கடி, வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் வாங்கி உள்ளார். பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்றாம் ஆண்டு கல்வியை முடித்த பின், இளம்பெண் பாலச்சந்தரிடம் கேட்டபோது திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும், திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் தன்னை உன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனவும் மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். இதுகுறித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்