நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராத இளம் பெண்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து ரமணி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமணி தூக்கு போட்டு இறந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும், தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்ணுடன் மோகன் ராஜ் என்பவர் வசித்து வந்ததாகவும், அடிக்கடி இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்