காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு -மிடுக்காக வந்து அஞ்சலி செலுத்திய சிறுவன்

x

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்கள் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிக்க உறுதி ஏற்போம் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், சென்னையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தில் சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலிக்கு பிறகு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்