இரவில் திடீரென மாறிய கிளைமேட்.. சென்னையில் இடி,மின்னலுடன் வெளுத்தெடுத்த கனமழை

x

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மெரினா கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த‌து. புரசைவாக்கம் பகுதியில், தாழ்வான சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. அண்ணா சாலை அருகே உள்ள ஜிபி ரோட்டில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. இருசக்கர வாகனங்கள் பழுதானதால், வாகன ஓட்டிகள் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. திருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கேளம்பாக்கம், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்த‌து. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல இடங்களில் வீடுகள் இருளில் மூழ்கின.


Next Story

மேலும் செய்திகள்