ரசிச்சி ருசிச்சி குடிக்கிற ரூ.10 ஜூஸ்..வீட்டுல இப்படி தான் தயாராகுது?

x

ரசிச்சி ருசிச்சி குடிக்கிற ரூ.10 ஜூஸ்..வீட்டுல இப்படி தான் தயாராகுது? - அதிகாரிகள் பார்த்த அதிர்ச்சி காட்சி

சென்னை பெரம்பூரில் 10 ரூபாய் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்த வீட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, சீல் வைத்தனர்.பெரம்பூர் புழல் முருகேசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், உணவு பாது காப்புத் துறை அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் எந்த வித சுகாதாரத்தன்மையும் இல்லாமல், சிறிய அளவிலான குளிர் பானங்கள் தயாரித்து, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கிருந்து மூலப்பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், அந்த இடத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்