எருமை மாடு எங்கிருந்து வந்தது? யாருடையது? - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை...

x

சென்னையில் பெண்ணை எருமை மாடு முட்டி தள்ளிய சம்பவத்தில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்ற பெண் உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றபோது, சாலையில் சென்ற எருமை மாடு முட்டி தள்ளியது. அவர் தரையில் விழுந்ததை அடுத்து மாட்டின் கொம்பில் சிக்கி கொண்டதால், சுமார் 500 மீட்டர் தூரம் பெண்ணை இழுத்து சென்றது. இதைக்கண்டு அச்சம் அடைந்த அங்குள்ள மக்கள் அனைவரும் ஓடி வீடுகளுக்குள் பதுங்கினர். பெண்ணை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்