ரூ.600 கோடி மெகா மோசடி - தமிழகத்தை பரபரப்பாக்கிய வழக்கு CBI-க்கு மாற்றம்

x

குமரி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையான பளுகல் பகுதியில் இயங்கி வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் 600 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு, அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமறைவானதை அடுத்து, பணத்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், கேரள அரசிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்