கிணற்றில் இளைஞர் சடலம் மீட்பு - விசாரணை தீவிரம்

x

உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், சடலத்தை மீட்டனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 30 வயதாகும் விஜய் என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்