வீட்டிற்குள் கிடந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சடலம்... வைரலாகும் ஆடியோ - பின்னணி என்ன?

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வாணியம்பாடி சென்னாம்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். 34 வயதான இவர், ஆம்புலன்ஸ் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், பணியில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக உதயகுமார் வேலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உதயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த உதயகுமார், திடீரென மர்மமான முறையில் வீட்டிற்குள் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழியரின் மரணம் தற்கொலையா அல்ல வேறேதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 108 ஆம்புலன்ஸ் நிவாகத்தின் மாவட்ட மேலாளருடன் உதயகுமார் உயிரிழப்பதற்கு முன் பேசிய செல்போன் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்