சட்டம் தெரியாமல்.. 108 ஊழியர் மீது கை வைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

கோவை சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவரை மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடந்த 7-ஆம் தேதி குடும்பத் தகராறில் கணவர் தாக்கியதில் பலத்த காயமடைந்த மனைவியை, ஆம்புலன்ஸ் ஊழியர் தமிழரசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆம்புலன்ஸ் ஊழியருடன் தகராறு செய்த பெண்ணின் கணவர், அவரை பலமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ஆம்புலஸ் வாகன ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், அவரை தாக்கிய சிவக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்