90பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான்.. உற்சாக வரவேற்பு

x

இந்தியா சார்பில், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஜுலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தலைமை தாங்க தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார். 5 பேர் கொண்ட அணியில், ஆண்களுக்கான ட்ராப் போட்டியில் தகுதி பெற்றுள்ளார். மேலும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஷாட்கன் அணிக்கும் தலைமை தாங்குகிறார். இந்நிலையில், கொடைக்கானல் கணேசபுரம் பகுதிக்கு வந்த அவருக்கு, மலைக்கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்