CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்! | IPL2024 | CSK | Cricket

x

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடக பங்குதாரராக மின்மினி செயலி செயல்பட உள்ளது.

உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் செயலியான மின்மினி கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாளர்கள் தங்கு தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, குறுகிய காலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்மினி செயலி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடக பங்குதாரராக செயல்படும் என மின்மினி செயலியின் நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரையொட்டி மின்மினி செயலியில் பயனாளர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படும் என்றும், பயனாளர்கள் வீரர்களை வாழ்த்தி மின்மினி செயலியில் வீடியோ பதிவிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மின்மினி செயலியுடன் இணைந்து செயல்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருப்பதாக சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்