புதிய அத்தியாயம்.. அடிக்கல் நாட்டிய BCCI | India Cricket | Sports | Thanthitv

x

வடகிழக்கு மாநிலங்களில் உள்ளரங்க கிரிக்கெட் அகாடமிகள் அமைக்க பிசிசிஐ அடிக்கல் நாட்டியுள்ளது. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட 6 வடகிழக்கு மாநில வீரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என அகாடமிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். உள்ளரங்க அகாடமிகளில் நெட்ஸ், நீச்சல் குளம், ஃபிட்னஸ் மையங்கள் உள்ளிட்டவை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்