பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி /அரையிறுதியில் அமித் ரோஹிதாஸிற்கு தடை

x

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய வீரர் அமித் ரோஹிதாஸிற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தடை விதித்துள்ளது. காலிறுதி ஆட்டத்தில் அமித் ரோஹிதாஸின் ஹாக்கி மட்டை, எதிர்பாராத விதமாக இங்கிலாந்து வீரரின் முகத்தில் பட்டது. இதனால் காலிறுதியில் அமித்திற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்டதாக அமித் ரோஹிதாஸிற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெர்மனிக்கு எதிராக நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோஹிதாஸால் விளையாட முடியாது.


Next Story

மேலும் செய்திகள்