308 ரன்கள் முன்னிலை - வலுவான நிலையில் இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணி 149 ரன்களில் சுருண்ட நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித், விராட் கோலி, கெய்ஸ்வால் ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு, 81 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, 308 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது.
Next Story