ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவிலின் ஆகம விதிப்படி 10 நாட்கள் நடத்தப்பட வேண்டிய உற்சவ விழா, கடந்த சில ஆண்டுகளாக 3 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 10 நாட்களுக்கு ஆனி மாத உற்சவ விழாவை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உற்சவ விழா எப்போது 10 நாட்கள் நடத்தப்பட்டது... எந்த ஆண்டில் 3 நாட்களாக குறைக்கப்பட்டது என்பது குறித்து, கோவில் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்