மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து.. டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது

x

சேலத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட தனியார் டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோரிமேட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 10 மொழிகளை கற்று மாணவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டுமென கூறியதையும், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும் தனது சமூக வலைதள கணக்குகளில் கருத்து பதிவிட்டார். இதுதொடர்பான அறிக்கை சேலம் மாநகர கமிஷனருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆசிரியரை ஜாமினில் வெளி வரமுடியாத 5 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்