ஆளுநருக்கு எதிராக போராட்டம் மாணவர்கள் அமைப்பினர் கைது நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி நிர்வாகி நியமிக்கப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து ஆளுநர் வர உள்ள வழிகளில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த‌து. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று, பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியான கொக்கிரகுளம் பகுதியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைவரும் பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்