திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர்பி.டி.ஆர்.க்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே கண்ட காட்சியால் டென்ஷன்

x

மதுரையில் கழிவறை திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஆண்கள்.... பெண்கள்.... போர்டு... குப்பை பெட்டி... என கிளினாக காட்சியக்கிறது மதுரையில் கட்டப்பட்ட பொது கழிவறை...

இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் உள்ளேயும் கிளீன் ஆகியிருக்கும் என்பதுதான் அதிர்ச்சி செய்தி...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும்... பொதுமக்கள் சேவைக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

சித்திரை திருவிழா நடைபெற்ற போது கூட செயல்பாட்டுக்கு வராமல் பளிச்சென இருந்தன லட்சங்களில் செலவிடப்பட்ட கழிவறைகள்

பயன்பாட்டுக்கு எப்பபோது வரும் என காத்திருந்த கழிவறைகளை மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அவருடன் மாநகராட்சி மேயர், ஆணையர் எல்லாம் திறப்பு விழாவிற்காக வந்திருந்தனர். பெயர் பலகையை திறந்து வைத்த பிடிஆர், ரிப்பன் கட் பண்ணி கழிவறையை திறந்து வைத்து உள்ளே ஆய்வு செய்தார். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு பைப் லைன் இணைப்பு இல்லாமல் கழிவறை கோப்பைகள் மட்டும் ஆங்காங்கே இருந்தன. சிறுநீர் கழிக்கும் கோப்பைக்கு குடிநீர் டேப் பொருத்தப்பட்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்த அமைச்சர் என்ன இது என்று கேட்ட போது, இருந்த பைப் இணைப்புகள், டேப் எல்லாவற்றையும் திருடிவிட்டார்கள் என்று அதிகாரிகள் நூதனமான பதிலை கொடுத்திருக்கிறார்கள்.

உடனடியாக எல்லாவற்றையும் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்...

கழிவறையை திறப்பதற்குள்ளே பொருட்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் சொல்ல... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் கோப்பையை கழற்றிவிட்டு கிளீன் ஆக்கியிருப்பார்களோ கழிவறை திருடர்கள் என பலரும் முனுமுனுத்தவாறு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்