"காங்கிரஸ் எனும் பேய்" - ஜார்க்கண்டில் பிரதமர் மோடி விளாசல் | PM Modi | BJP | Rahul Gandhi |Congress

x

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் ஜார்க்கண்டிற்கு 17 நாட்களில் 2 ஆவது முறையாக பயணம் செய்த பிரதமர் மோடி, ஹசாரிபாக்கில் பேசியபோது காங்கிரஸ் கூட்டணி அரசை விளாசினார். பழங்குடி மக்களுக்காகவும், ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு இரவு பகலாக பணியாற்றுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசாங்கம் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை, காங்கிரஸ் எனும் பேய் பிடித்து ஆட்டுகிறது எனவும் விளாசினார். காங்கிரஸ் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறது, அதை நடக்க விடமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்