"2030க்குள் " பேரவையில் அமைச்சர் கொடுத்த உறுதி | I. Periyasamy | Appavu | Thanthitv

x

ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டு அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் எனவும் 1.5 லட்சம் வீடுகள் பழுது நீக்கம் செய்யப்படும் எனவும் கூறினார். அதேபோல், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2 ஆயிரத்து 30க்குள் குடிசை இல்லா தமிழகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்