#BREAKING || "ஆணியை இறக்கும் பாஜக.. உயிராக போற்றும் திமுக".. வேளாண் நிதிநிலை முதல்வர் அறிக்கை

x

"உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்". வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை. "தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது". "மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு". டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது - முதலமைச்சர். "உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கிறது பாஜக அரசு - உழவர்களின் மேன்மைக்கு திட்டங்களை தீட்டுகிறது திமுக அரசு" பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின். "நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". "கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது". "கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு". உழவர்கள் மட்டுமல்ல, தொழில்துறையை போல் அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்கும் வகையில் திட்டங்கள் - முதலமைச்சர் பெருமிதம்.


Next Story

மேலும் செய்திகள்