"நிச்சயம் சிறைக்கு செல்வார்கள்.." - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

x

எத்தனை அச்சுறுத்தல் விடுத்தாலும், ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்று, பிரதமர் மோடி தெரிவித்தார்.சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

பல தசாப்தங்களுக்கு பிறகு நாடு நிலையான மற்றும் வலிமையான பாஜக அரசை ஏற்படுத்தியதாக கூறினார். இந்தியா விடுதலை பெற்றது முதல், ஏழைகளின் நலன்களை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் குடும்பத்தின் செல்வந்தர்கள் விலைவாசி என்பதன் அர்த்தத்தை கூட ஒருபோதும் உணர்ந்து கொண்டதில்லை என குற்றம் சாட்டினார். தங்கள் அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் விளைவாக சுமார் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டு இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியா தான் தன்னுடைய குடும்பம் என்று கூறிய பிரதமர் மோடி, கொள்ளையடிப்பதில் இருந்து நாட்டை பாதுகாக்க தான் போராடி வருவதாக தெரிவித்தார். எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும், ஊழல் செய்தவர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்