டியூஷன் படிக்க வந்த 14 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 66 வயது மாஸ்டர்

x

சென்னையில் இந்தி டியூஷன் படிக்க வந்த 14 வயது சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு தந்த 66 வயது டியூஷன் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்... சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அங்குள்ள அதேபகுதியில் வாசுதேவன் என்பவரிடம் இந்தி டியூஷன் சென்றுள்ளார்... வழக்கம் போல கடந்த 11ம் தேதி டியூஷன் சென்ற மாணவனை வகுப்பு முடிந்தத பின்பும் வாசுதேவன் காத்திருக்க வைத்துள்ளார்... ஆசிரியர் சொன்னதால் காத்திருந்த மாணவனுக்கு வாசுதேவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது... அங்கிருந்து தப்பியோடிய சிறுவன் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, உடனடியாக போலீசில் புகாரளிக்கப்பட்டு வாசுதேவன் போக்சோ சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்