"அழுக கூடாது.. அம்மா வந்துருவாங்க.." தொலைந்த குழந்தைக்கு தாயாக மாறிய போலீஸ்

x

நாகை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தாகா. இவர், தனது குடும்பத்துடன் காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில், தனது 3 வயது மகனான முகமது பாசிலை கூட்டத்தில் தொலைந்ததை அறியாமல் சுற்றிவந்துள்ளனர். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிறுவன் ஒருவன் யாருமின்றி தனியாக அழுது கொண்டு இருந்ததை கண்டு மீட்டனர். பயத்தில் சிறுவன் ஓயாமல் அழுதுக்கொண்டிருந்த நிலையில், நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் உதவி ஆய்வாளர் மோகன் சிறுவனை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். தொடர்ந்து, சிறுவனுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பூங்கா, கடற்கரை என பெற்றோரை தேடி அலைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்