அழைக்கும் திகார்.. தயாரான கெஜ்ரிவால்.. டெல்லி ஸ்பெஷல் கோர்ட் எடுக்கும் முடிவு..?

x

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமினை ஒரு வாரம் நீட்டிக்க கோரியும், மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமின் வழங்க கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, டெல்லி சிறப்பு நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் 10ந் தேதி இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், ஜுன் 2ந் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்